செல்வ வளத்தை உயர்த்தவும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையவும் உங்களின் பரிகாரங்களை செய்ய தகுந்த நாள் வியாழன். உங்கள் இல்லங்களில் உடல்நலம், பணம், அல்லது உறவுமுறை பிரச்சனை இருந்தால் நீங்கள் வியாழன் அன்று சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் உங்களின் இக்கட்டான நிலையை மேம்படுத்தலாம் என நம்பப்படுகிறது


சில சமயங்களில் பணப்பற்றாக்குறையால்  நமது வீட்டு பொறுப்புகளை கூட செய்ய இயலாமல் போகலாம்.  இது போன்ற சமயங்களில் வியாழன் அன்று சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் நமது பிரச்சனையில் இருந்து சற்று விடுபட முடியும். வியாழன் அன்று அரிசி மாவை வறுத்து அதில் வாழைப்பழத் துண்டுகள், சர்க்கரை சேர்த்து கடவுளுக்கு பிரசாதமாக படைத்தது வணங்க வேண்டும் என நம்பப்படுகிறது. மீதம் இருக்கும் பிரசாதத்தை அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.  இப்படி செய்வதன் மூலம் பண நெருக்கடியில் இருந்து விடுபடலாம். திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது



தேவியின் அருள் பெற:


வியாழன் மஹா விஷ்ணுவை வழிபட உகந்த நாள். அவரை வழிபடுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளையும் பெறமுடியும். லட்சுமி தேவியின் அருளால் பணநெருக்கடி விலகி அபரிதமான பணவரவு உண்டாகும் என நம்பப்படுகிறது


தந்தையுடன் உறவு மேம்பட..      


தந்தையோடு இருக்கும் மனக்கசப்பு நீங்கி நல்ல உறவு மேம்பட வேண்டுமாயின் வியாழன் அன்று இந்த பரிகாரத்தை செய்யலாம். காலையில் நீராடியவுடன் சூரிய தேவனுக்கு நீர் சமர்ப்பித்து அவரின் 'ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹௌன்ஸா ஸூர்யாய நமஹ' எனும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து வந்தால் தந்தையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி சுமுகமான உறவு மேம்படும் என நம்பப்படுகிறது


செல்வம் பெருக...


உங்களின் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டுமாயின் காலையில் நீராடி ஒரு தேங்காயை கோயிலுக்கு எடுத்து செல்ல வேண்டும். அங்கு கடவுளுக்கு பூக்களை சமர்ப்பித்து, தூப-தீபம் காட்டி வழிபட வேண்டும். பின்னர் அதே முறையில் அந்த ஒற்றை தேங்காவையும் வழிபட வேண்டும். பிறகு அந்த தேங்காயை கோயிலிலேயே விட்டு விட வேண்டும். இப்படி செய்வதால் உங்களின் செல்வன் பெருகும் என கூறப்படுகிறது.


நட்பு பலப்பட....


உங்களின் நட்புறவு இன்று போல் என்றுமே பிணைப்போடு இனிதே தொடர வேண்டும் என நீங்கள் எண்ணினால் உங்கள் நண்பருக்கு இந்த நாள் அன்று ஒரு உலோகத்தை பரிசளியுங்கள். முடிந்தால் காற்று மணிகளை (wind chime) பரிசாக அளிக்கலாம். இதன் மூலம் உங்கள் நட்பு பலப்படும் என நம்பப்படுகிறது