சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகளுக்காக பக்தர்கள் இன்று மாலை 5 மணி முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐய்யப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், இந்த 5 நாட்களில் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த ஓராண்டாக கொரோனா காரணமாக அதிகளவில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் வருவோர், கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.




இந்நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் கொரோனா இரண்டாவது அலையால் நாடு முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. முதலில் வடமாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து தென்மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியா மாநிலங்களிலும் கொரோனா கோரதாண்டவம் ஆடியது. கடந்த சில நாட்களாக தான் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கேரளாவில் குறைந்த வந்த பாதிப்பு, சில தினங்களாக மீண்டும் அதிகரிக்கிறது.


’திருமண தடை நீக்கும் புகழிமலை முருகன்’ தல வரலாறு..!


இதனிடையே, ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை வரும் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருந்தது.


 






இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணி முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக sabarimalaonline.org-இல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐய்யப்பனை தரிசனம் செய்ய முடியாத நிலையில், சாமியை காண கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேனி: 2ஆயிரம் ஆண்டு பழமை.. கண்ணகி சிலை.. மெய்சிலிர்க்க வைக்கும் மேலச்சொக்கநாதர் வரலாறு!