நாள்: 28.09.2022


நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


குளிகை :


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம் :


காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் – தெற்கு 


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு சற்று குழப்பம் அதிகரிக்கும். தேவைற்ற சிக்கல்கள் வரும். அமைதியுடனும், பொறுமையுடன் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. 


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் மிகவும் பணிவுடன் நடந்து கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்கள் புகழ் கூடும். அமைதிக்கும், பொறுமைக்கும் தக்க மதிப்பு கிட்டும். உங்கள் பணிவால் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கைகளில் கிட்டும். நம்பிக்கை அதிகரிக்கும் நாள். 


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் அமோகமான நாளாக அமையும். உங்களால் பெற்றோர்களுக்கு பெருமை கிட்டும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் புரியும் இடம் மற்றும் சுற்றத்தார் மத்தியில் மிகுந்த மதிப்பு உண்டாகும். திருமண பேச்சுக்கள் உண்டாகும். சுபகாரியங்கள் வீட்டில் நடக்கும். பெரியவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படுவீர்கள். 


கடகம் :


கடக ராசி நேயர்களே, இந்த நாள் கேளிக்கையான நாளாக உங்களுக்கு அமையும். நண்பர்களுடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். பிடித்தவர்களுடனான சந்திப்பு நிகழும் . குடும்பத்தில் குதூகலம் நீடிக்கும். நன்மைகள் அதிகரிக்கும். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். முக்கிய சந்திப்புகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஏற்படும் சலசலப்புகளை பெரிதுப்படுத்தக்கூடாது. பணியில் அதிக சுமை ஏற்படும். கவலைகள் குறைய கணபதியை வழிபட வேண்டும். 


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,  இந்த நாள் மகிழ்ச்சியான நாள் ஆகும். வாகன யோகம், பண யோகம் உண்டாகும். குடும்பத்தினருடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் வசூலாகாத கடன்தொகை வசூலாகும். உடல்நலக்குறைவு சீராகும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிட்டும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். வீட்டில் மற்றும் பணிபுரியும் இடங்களில் நீடித்து வந்த பிரச்சினைகள் சுமூகமாக நிறைவுக்கு வரும். சகோதர வழிப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடப்பதன் மூலம் பல பிரச்சினைகள் வருவதை தவிர்க்க முடியும். செல்போன் வழி நல்ல தகவல் வரும். 


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாள் செல்லவிருந்த ஆலயத்திற்கு சென்று மகிழ்வீர்கள். சிவபெருமானை வணங்குவதன் மூலமாக மன அமைதி பெறலாம். ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்வதற்கான திட்டங்கள் உருவாகும். கணவன் மனைவி இடையே நீடித்து வந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். 


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,  இந்த நாள் சற்று சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அன்பிற்குரியவர்களுடன் நேரத்தை செலவிட முடியாத சூழல் ஏற்படலாம். அலுவலகத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. மன அமைதிக்கு சாய்பாபா ஆலயத்திற்கு செல்ல வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. 


மகரம் :


மகர ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வீண் கோபம் ஏற்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையுடன் செயல்படுவது அவசியம். பண விவகாரத்தில் அடுத்தவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடாது. உங்கள் திறமைக்கு சோதனை அளிக்கும் விதத்தில் சில சம்பவங்கள் நடக்கலாம். 


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,  இந்த நாள் உங்கள் ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும். பேராசைபடக்கூடாது. குடும்பத்தில் ஏற்படும் சிறு, சிறு பிரச்சினைகளை பெரிதுப்படுத்தக்கூடாது. மருத்துவச் செலவுகள் ஏற்பட  வாய்ப்புண்டு. ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு மன அமைதி பெறலாம். கனவுகளை அடைவதற்கு தடங்கல்கள் வரலாம். 


மீனம்:


மீன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு ஆக்கப்பூர்வமான நாளாக அமையும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிட்டும். காதலர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.  திருமண பேச்சுக்கள் வீடுகளில் ஏற்படும். சொத்து பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வரும்.