நாள்: 28.10.2022


நல்ல நேரம்:


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை






 

மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை




மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம் :


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். அரசு சார்ந்த பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.


ரிஷபம்


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சில காரியங்கள் எளிதில் முடியும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


மிதுனம்


மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வாழ்க்கை துணைவருடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனதில் கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். காப்பீடு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.


கடகம்


நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் எளிதில் முடியும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நல்லது. மனதில் வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உங்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.


சிம்மம்


தாயாரிடம் அனுசரித்து செல்லவும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனை மீதான கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.


கன்னி


பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் அடைவீர்கள். எழுத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


துலாம்


எதிர்பாராத இடத்திலிருந்து தனவரவு மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் மாற்றம் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.


விருச்சிகம்


குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தடைகள் குறையும் நாள்.


தனுசு


புதிய முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.


மகரம்


மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் ரீதியான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.


கும்பம்


உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.


மீனம்


பிள்ளைகளின் தனித்திறமைகளை புரிந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். பயணங்கள் சார்ந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.