நாள்: 28.07.2022


நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


குளிகை :


காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை


எமகண்டம் :


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் - தெற்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,


மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். உலகியல் வாழ்க்கையை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். வெற்றிகரமான நாள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, 


உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை அகலும். மதிப்பு மேம்படும் நாள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே,


நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவு மேம்படும் நாள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே,


குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். மனதில் தேவையற்ற சிந்தனைகளை குறைத்து கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அறிமுகமில்லாத புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,


வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவின் மூலம் தொழில் சார்ந்த உதவியும், லாபமும் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே,


எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே,


உயர்கல்வி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவின் மூலம் திருப்திகரமான சூழல் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,


மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே,


பேச்சுத்திறமையின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,


உத்தியோக பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே,


சவாலான பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.