நாள்: 23.03.2023 - வியாழன்கிழமை 


நல்ல நேரம்:


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


இராகு:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


குளிகை:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம்:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் - தெற்கு


மேஷம்


மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதை பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். ரகசியமான சில ஆராய்ச்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வேள்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். 


ரிஷபம்


செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


மிதுனம்


வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். பேராசையின்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் ஆலோசனைகளை பெறுவதன் மூலம் தெளிவு பிறக்கும். 


கடகம்


எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேள்வி பணிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள்.


சிம்மம்


அரசு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். 


கன்னி


வெளிப்படையான குணநலத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். புதிய இடங்களுக்கு சென்று வருவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தவறிப்போன பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் நன்மை ஏற்படும். நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். 


துலாம்


தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் அமையும். புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தந்தைக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். 


விருச்சிகம்


எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். லாபத்தை மேம்படுத்துவதற்கான சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.


தனுசு


நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் அதிகரிக்கும். குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். 


மகரம்


பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். தொழில்நுட்ப கருவிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். இசை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் திருப்தியான சூழல் அமையும். 


கும்பம்


வஞ்சனையான சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்தி கொள்வது நல்லது. மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சூழ்நிலைகளை அறிந்து பேசுவது நன்மையை உண்டாக்கும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 


மீனம்


குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். புதிய நபர்களால் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும்.