நாள்: 22.08.2022


நல்ல நேரம் :


காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 09.15 மணி முதல் 10.15 மணி வரை


இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை


இராகு :


இரவு 7.30 மணி முதல் மாலை 9.00 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். 


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, எதிர்பாராத தனவரவு உண்டாகும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். 


கடகம் :


கடக ராசி நேயர்களே,  அரசு தொடர்பான பணிகளில் அனுபவம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, தயக்க உணர்வுகள் குறைந்து எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தந்தையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். எதிர்காலம் தொடர்பான சேமிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். 


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் ஆதாயம் மேம்படும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, கூட்டு வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பின் மூலம் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களிடம் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். 


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். எண்ணிய உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது நல்லது. வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். 


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குலதெய்வம் தொடர்பான பிரார்த்தனைகள் நிறைவேறும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். 


மகரம் :


மகர ராசி நேயர்களே, மனை மீதான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆதாயம் மேம்படும். கலை நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். 


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும். உடன்பிறந்தவர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். 


மீனம்:


மீன ராசி நேயர்களே,வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். ஆபரணங்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.