நாள்: 25.02.2024 - ஞாயிற்றுகிழமை


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


காலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.


ரிஷபம்


நினைத்த காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.


மிதுனம்


குடும்பத்தில் ஆதரவு மேம்படும். பூர்வீகம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிரடியான சில செயல்களின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் புரிதல் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.


கடகம்


குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனை மேம்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். கவனம் வேண்டிய நாள்.


சிம்மம்


பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.


கன்னி


கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சோர்வு விலகும் நாள்.


துலாம்


திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும். கமிஷன் சார்ந்த விஷயங்களில் லாபம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.


விருச்சிகம்:


சமூகம் தொடர்பான விஷயங்களில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வேலையாட்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பரிவு நிறைந்த நாள்.


தனுசு


பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பிள்ளைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாரத சில தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.


மகரம்


மனதில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் அதிக உரிமைகள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. சில இழுபறிகளுக்கு பின்பு எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் திருப்பங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.


கும்பம்


குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மதிப்பு மேம்படும். உத்தியோகத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டாகும். போட்டிகளில் சாதகமான சூழல் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.


மீனம்


எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படும். அரசு சார்ந்த விஷயங்களில் அணுகூலம் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நலம் நிறைந்த நாள்.