நாள்: 13.02.2024 - செவ்வாய்கிழமை


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


எமகண்டம்:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


நண்பர்களிடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஜாமீன் சார்ந்த செயல்களை தவிர்க்கவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ரகசியமான சில முதலீடுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.


ரிஷபம்


திட்டமிட்ட பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் மேம்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிற இன மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.


மிதுனம்


உடன் இருப்பவர்களால் பொறுப்பு அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபார இடமாற்றங்கள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதில் பொறுமை வேண்டும். செலவு நிறைந்த நாள்.


கடகம்


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். ஆராய்ச்சிப் பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.


சிம்மம்


சந்தேக உணர்வுகளால் குழப்பம் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.


கன்னி


எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஒப்பந்தப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.


துலாம்


எதிர்பார்த்த சில தனவரவுகள் உண்டாகும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பெருமை நிறைந்த நாள்.


விருச்சிகம்:


மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.


தனுசு


முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணம் மேம்படும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். அதிரடி மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். கடன் அடைப்பது பற்றிய சிந்தனை ஏற்படும்.  சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். முயற்சி நிறைந்த நாள்.


மகரம்


உயர் அதிகாரிகளின் மூலம் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். செல்வச் சேர்க்கை குறித்த எண்ணம் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள்.  விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிறு மற்றும் குறு தொழில் குறித்த எண்ணம் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.


கும்பம்


குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபார விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.


மீனம்


விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அரசு காரியங்களில் விழிப்புணர்வு வேண்டும். பக்தி நிறைந்த நாள்.