நாள் - 15.10.2023 - ஞாயிற்று கிழமை


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 3.15 மணி முதல் மாலை 4.14 மணி வரை


இராகு:


காலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். கல்லூரி கால நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் விலகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.


ரிஷபம்


பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி நிமிர்த்தமான கருத்துகளுக்கு ஆதரவு மேம்படும். அசதிகள் குறையும் நாள்.


மிதுனம்


நுணுக்கமான சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். சுகவீனம் நிறைந்த நாள்.


கடகம்


எதிர்பார்த்த சில வேலைகள் நிறைவு பெறும். தாயாரிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நெருக்கடியான சூழல்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களால் நிம்மதி ஏற்படும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.


சிம்மம்


சுபகாரிய முயற்சிகள் கைகூடும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் மாற்றம் பிறக்கும். எதிலும் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.


கன்னி


உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வங்கி தொடர்பான பணிகள் நிறைவு பெறும். ஆபரண விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.


துலாம்


பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவல் பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.


விருச்சிகம்


குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.


தனுசு


மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் சந்திப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். லாபத்தின் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.


மகரம்


சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும்.  சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.


கும்பம்


பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தடைபட்ட சில பணிகளை முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தேடல் உண்டாகும். துணிவு நிறைந்த நாள்.


மீனம்


உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எண்ணிய சில பணிகளில் தாமதம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டுச் செயல்படவும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். சிந்தனை நிறைந்த நாள்.