நாள் - 13.10.2023 - வெள்ளிக்கிழமை


நல்ல நேரம்:


நண்பகல் 12.15 மணி முதல் பகல் 1.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம்:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் லாபம் அடைவீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு முடிவு பிறக்கும். சுதந்திரம் நிறைந்த நாள்.


ரிஷபம்


குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மேல்நிலைக் கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.


மிதுனம்


திட்டமிட்ட பணிகள் தாமதமாக முடிவு பெறும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். பழமையான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஓய்வு நிறைந்த நாள்.


கடகம்


உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு உயரும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துரிதம் நிறைந்த நாள்.


சிம்மம்


கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். தோற்றப்பொலிவு மேம்படும். திடீரென சில முடிவுகளை எடுப்பீர்கள். தொழில்நுட்ப கருவிகளால் விரயம் உண்டாகும். வரவுகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தவறிய சில வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.


கன்னி


பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இனம்புரியாத சில சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பணி நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். புதிய செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. கனிவு நிறைந்த நாள்.


துலாம்


வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடலில் ஒருவிதமான அசதி ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களிடம் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடன் நெருக்கடிகள் குறையும். ஆக்கம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் தெளிவு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.


தனுசு


கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். நண்பர்களின் மத்தியில் ஒத்துழைப்பு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். மனதளவில் தன்னம்பிக்கை துளிர்விடும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.


மகரம்


உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகி இருந்தவர்கள் திரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் தெளிவு ஏற்படும். பணி நிமிர்த்தமான நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உண்டாகும். அசதிகள் விலகும் நாள்.


கும்பம்


பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அலைச்சல்கள் மேம்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். உணர்ச்சிவசமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


மீனம்


பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். நிறைவு நிறைந்த நாள்.