நாள்: 15.08.2022


நல்ல நேரம் :


காலை 6 .15  மணி முதல் காலை 7.15  மணி வரை


மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை


மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை


இராகு :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் காலை 3.00 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


சூலம் – கிழக்கு 


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். 


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மருத்துவம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும்.


கடகம் :


கடக ராசி நேயர்களே,  மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த தொழிலில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிதானமான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவினை பெறுவீர்கள். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களில் புதிய நபர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். நண்பர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். உடல் சோர்வின் மூலம்  செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். 


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பாராட்டுகளும், மதிப்புகளும் மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியத்தில்  இருந்துவந்த இன்னல்கள் குறையும். சொத்துக்களின் மீதான கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். சிறிய வருமானம் தரும் தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் பொருட்கள் மீதான ஆசைகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். 


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இன்ப சுற்றுலா தொடர்பான முயற்சிகள் கைகூடும். இணையம் சார்ந்த துறைகளில் நிதானம் வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கான பயணங்கள் கைகூடும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்வது நல்லது. செயல்பாடுகளின் தன்மையை அறிந்து முடிவு எடுக்கவும்.  அனுபவ அறிவின் மூலம் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சங்கம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடை தொடர்பான பணிகளில் அனுகூலம் உண்டாகும். 


மகரம் :


மகர ராசி நேயர்களே, அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். 


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, ஆடம்பர சிந்தனைகள் அதிகரிக்கும். கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சுயமான சிந்தனைகளின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். உண்மை நிலையை அறிந்து பேசுவது நல்லது. கணிதம் சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய கலை சார்ந்த ஆர்வமும், தேடலும் அதிகரிக்கும். 


மீனம்:


மீன ராசி நேயர்களே, சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் நிதானம் வேண்டும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண