புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூரார் சன்னதி தனியாக உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கருவூரார் சித்தர் அவதார திருநாளை ஆலயத்தின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக இன்று கருவூரார் சித்தர் சன்னதியில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று அதைத் தொடர்ந்து கருவூராருக்கும், உற்சவர் கருவூராருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட சிறப்பு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து கருவூரார் சித்தருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் மகாதீபாராதனை நடைபெற்றது.



அதைத்தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று இரவு கருவூரார் அவதார திருநாளை முன்னிட்டு தேர்பவனி விழா நடைபெற்றது. இந்த தேர்பவனி விழாவை முன்னிட்டு ஆலயத்தில் கருவூரார் உற்சவர அவதார திருநாளை முன்னிட்டு தேர்பவனி விழா நடைபெற்றது. இந்த தேர்பவனி விழாவை முன்னிட்டு பிரத்யேகமாக உள்ள கருவூரார் திருத்தேரில் உற்சவர் கருவூரார் கொலுவிருக்க செய்தனர். வண்ண மாலைகள் அணிவித்து, மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட பிறகு மேளதாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து பஞ்ச கற்பூர ஆராத்தி உடன், மகா தீபாராதனை நடை பெற்ற பிறகு கருவூரார் சித்தர் திருத்தேர் பவனி விழா துவங்கியது.




 


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய வடக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல், கிழக்கு வாசல் வழியாக கருவூரார் சித்தர் திருவீதி உலா வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபத்திற்கு வந்தடைந்தார். கருவூரார் சித்தர் சித்திரை மாத அஸ்த நட்சத்திரம் நட்சத்திர அவதார திருநாள் திருப்தி காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து கருவூரார் சித்தரை தரிசித்தனர். ஆலயத்திற்கு வந்த கருவூரார் சித்தருக்கு மகா தீபாரதனை காட்டப்பட்ட பிறகு திருத்தேர் பவனி விழா சிறப்பாக நிறைவு நடைபெற்றது.