திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் கொண்டது. இதில் ஏழுவது கிலோமீட்டரில் மைய பகுதியான அடி அண்ணாமலை கிராமத்தில்  அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம் ஆகும்.

இந்த திருத்தலத்தில் தினம்தோறும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது. இறைவியின் திருநாமம் உண்ணாமுலையம்மாள். பிரம்மதேவர் பிரதிஷ்டை செய்த மூலவர் இந்தக் கோவிலில் அமைந்திருப்பது சிறப்பானது. நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர்  திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது. அண்ணாமலையாரின் முதல் திருத்தலம் இதுவாகும். அதாவது ஆதி திருத்தலம் அதனால் ஆதி அண்ணாமலையார் திருக்கோவில் என போற்றப்படுகிறது .



 

அணி அண்ணாமலை என்றும் சொல்வார்கள். படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வரும் சனகாதி முனிவர்களில் ஒருவருமான சனகரிடம், வேறெங்கும் களைய முடியாத பாவங்கள் அணி அண்ணாமலையார் திருக்கோவிலில் களையப்படும் என்று கூறியதாக புராணத் தகவல் சொல்கிறது.

 

சிவபெருமாளின் அடி முடி காணாத விஷ்ணு,பிரம்மா 

 

ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற  போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார் சிவபெருமாள்; இருவரும் ஒப்புக்கொண்டனர். 

மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண  வராக  உருவம் எடுத்து  பூமியைக் குடைந்து கொண்டு சென்றார். பின்னர் பிரம்மதேவன் சிவபெருமானின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது சிவபெருமானின்  முடியில் இருந்து விழுந்த தாழம்பூ கீழ் நோக்கி வந்து  கொண்டிருந்தபோது தாழம்பூவைக் கண்ட பிரம்மன் அதனிடம் தான்  சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம்  அடியைக் காண சென்ற பெருமாள்  காண முடியாமல்  திரும்பி தன்னுடைய  தோல்வியை சிவபெருமானிடம்  ஒப்புக்கொண்டார். பிரம்மனோ தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய்  தெரிவித்தார்  அவருக்கு தாழம்பூ  பொய்சாட்சி கூறியது.



 

 

அனைத்தும் அறிந்த சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கியதாக புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது  எனவும்  மற்றும் பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாழம்பூ ஆனது ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சிவ ராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பூஜையில் வைக்கப்படுகிறது. சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்மதேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியை இன்றும் நாம், ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் மூலவராக தரிசிக்கலாம்.



 

நால்வரான மாணிக்க வாசகரின் தனி கோவில் அமைந்த சிறப்பு 

 

அப்பர் , சமந்தர் , சுந்தரர் , மாணிக்கவாசகர் இதில் ஒருவரான மாணிக்க வாசகர் சிவபெருமானுக்கு அடி அண்ணாமலை என்றும் இப்பெரிய கோவிலும் மாணிக்க வாசகப் பெருமானுக்கு ஒரு கோவிலும் ஒரு குளம் உள்ளன. திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி பாடல்,

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் 

ஜோதியை யாம்பாட கேட்டேயும் 

வாள்தடங்காண்

 மாதே வருதியோ வன் செவலியோ நின் செவிதான் 

மாதேவன்  வார்கழல்கள் வாழ்திய வாழ்தொலி போய் 

வீதிவாய் கேட்டாலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து 

போதார் அமலியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன் 

ஏதேனும் ஆகாள் கிடந்தால் என்னே என்னே 

ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பவாய் 

மாணிக்க வாசகப்பெருமான் ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் திருவெண்பாவை இயற்றி பாடியதால் அவ்விடத்திலேயே அவருக்கு கோவில் கட்டியுள்ளனர். மாணிக்க வாசகருக்கு எந்த திருத்தலத்திலும் தனியாக கோவில் கட்டபடவில்லை திருவண்ணாமலை அடி அண்ணாமலையில் மட்டுமே கட்ட பட்டுள்ளது என்பது சிறப்புகுறியது. 

பிரம்ம தேவருக்கும் பெருமாளுக்கும் அக்னி சொரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்த தலத்தில் மலையாக குளிர்ந்து இன்றளவும் அருள்பாலிக்கின்றார். அடி முடி காணா அண்ணாமலையார் என போற்றப்படுகிறார். இதுமட்டுமின்றி இந்த ஆதி அண்ணாமலையார் திருத்தலத்திற்கு யாராலும் அவ்வளவு சுலபமாக வரமுடியாது. அய்யனாக நினைத்து அழைத்தால் மட்டுமே உங்களால் வரயியலும் எனவும் புராணங்களிள் குறிப்பிட்டுள்ளது .



 

ஆதி அண்ணாமலையார் கோவிலின் சிறப்பு 

 

அடி அண்ணாமலை சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் விமோசனம் கிடைக்கும். பாவ நிவர்த்திக்காக பிரம்மாவின்னால் சபிக்கப்பட்டு மற்றும் பூஜிக்கப்பட்ட லிங்கம் ஆதி அண்ணாமலையார் ஆதி  அருணாச்சலேஷ்வரர் அடி அண்ணாமலையார் என்னும் திருத்தலம்மாகும் . நினைத்தலே முக்தி தரும் இத்தளத்தினை தரிசித்தால் முன் ஜென்ம வினைகள் பிரம்மஹத்தி தோஷங்கள் நீங்கும் விவாக பிராப்தி கைகூடும் மற்றும் சகல சௌபாக்கியங்களும் கைகூடும் இத் திருத்தலத்தில் தரிசித்தால் என்கிறது ஐதீகம்.

 

இது போன்ற ஆன்மீக சிறப்பு கொண்ட திருத்தலங்களின் வரலாற்றை www.abpnadu.com என்ற ABP நாடு இணையதளத்தில் காணலாம்.