ஆடி வெள்ளி: மதுரை மல்லிகை கிலோ ரூ.800க்கு விற்பனை - மேலும் கூடுவதற்கு வாய்ப்பு - வியாபாரிகள் தகவல்.
மதுரை மல்லிகைப் பூ விற்பனை ஜோர்
மதுரை மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் சிறப்பு வாய்ந்த பூவாகும். மதுரை மையமாக உள்ளதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ கி.மு 300-ஆம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மற்றும் கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. இப்பூக்கள் தங்களது தனித்துவமான மணம் மற்றும் நறுமணத்திற்காக பிரசித்தி பெற்றவை. இதனால் வெளியூர் பயணிகள் மதுரை வரும் போது மல்லிகைப் பூவை விரும்பி வாங்குகின்றனர். இதே போல் கோயில் நகரமான மதுரையில் பிற பூக்களின் விற்பனையும் எப்போது சூடுபறக்கும். இந்நிலையில் தீபாவளியை தொடர்ந்து மதுரையில் பூக்களின் விலை எப்படி உள்ளது என்பதை காணலாம்.
விலை நிலவரம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும்
ஆடி மாத கோயில் திருவிழாக்கள் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு மதுரை மல்லிகை கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து குறைவாக உள்ளதாலும் திருவிழா காலம் என்பதாலும் இந்த விலை நிலவரம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் கருத்து. மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு திருப்பரங்குன்றம் திருமங்கலம் வலையங்குளம் சிலைமான் வரிச்சியூர் மேலூர் கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படுகின்ற. பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும் அண்டை மாவட்டங்களான திண்டுக்கல் தேனி சிவகங்கை இராமநாதபுரம் விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் வியாபாரிகளால் மதுரை மலர் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.
மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு உண்டு
மேற்கண்ட பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு உண்டு. இதன் நறுமணம், நீடித்த தன்மை போன்றவை காரணமாக மதுரை மல்லிகைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கி உள்ளது. இதன் காரணமாக மதுரையிலிருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரூ.400-ரூ.500க்கு விற்பனையாகி வந்த மதுரை மல்லிகை இன்று கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிற பூக்களின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு:
*முல்லை ரூ.500, *சம்பங்கி ரூ.300, *செவ்வந்தி ரூ.250, *பட்டன் ரோஸ் ரூ.180, *பன்னீர் ரோஸ் ரூ.300 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற பூக்களின் விலையிலும் கணிசமான விலையேற்றம் காணப்படுகிறது.
இது குறித்து மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், தற்போது மழை முழுவதுமாக வைத்துள்ளதால் பூக்கள் உற்பத்தி மிக மிக குறைவாக உள்ளது. மதுரை மல்லிகையை பொறுத்த வரை நான்கு டன்னுக்கும் குறைவாகவே பூக்கள் வரத்து உள்ளது. தற்போது விசேஷ காலம் என்பதால் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
