தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவணியில் கோடை மழை பெய்யாததால் விவசாயிகள் வறட்டு உளவு செய்து மக்காச்சோளம் விதைகளை ஊன்றுகின்றனர். சலுகை விலையில் மக்காச்சோளம் விதைகளைக் கேட்கும் விவசாயிகள்.




தூத்துக்குடி மாவட்டத்தில் வரக்கூடிய புரட்டாசி ராபி பருவத்தை முன்னிட்டு விவசாயிகள் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம்,பருத்தி, மிளகாய் போன்றவை பயிரிட தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆவணி மாதம் முழுவதும் மழை பெய்ததாக விவசாயிகள் நிலங்களை பலமுறை உழவு செய்தனர். இதனால் பருவகாலத்தில் பயிர்களை சுற்றி களைகள் முளைக்கவில்லை. எதிர்பார்த்த மகசூலை பெற முடிந்தது.




ஆனால் நடப்பாண்டில் ஆவணியில் கோடை மழை பெய்யவில்லை. இதனால் சட்டி உழவுக்கு பின் போதிய ஈரம் இல்லாததால் பல் உழவு போட முடியவில்லை. வேறு வழியின்றி பட்டம் நெருங்குவதால் கோவில்பட்டி பகுதியில் வறட்டு உழவு செய்து விவசாயிகள் முதல் விதைப்பாக மக்காச்சோளம் விதை ஊன்றுகின்றனர். புரட்டாசி முதல் வாரத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இயற்கை வழிபட்டு இந்த ஆண்டு முதல் விதைப்பாக பெண் விவசாயிகள் மக்காச்சோளம் விதையை தனியார் விதைக்கடைகளில் விலைக்கு வாங்கி ஏக்கருக்கு எட்டு கிலோ விதம் ஊன்றுகின்றனர். இதனால் தொடர்ந்து மழை போக்கு காட்டுவதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.




இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, கடந்தாண்டு ஆவணி மாதம் முழுவதும் மழை பெய்ததால் விவசாயிகள் நிலங்களை பல முறை உழவு செய்தனா். இதனால் பருவகாலத்தில் பயிர்களை சுற்றி களைகள் முளைக்கவில்லை. இதனால் எதிர்பார்த்த மகசூலை ஓரளவு பெற முடிந்தது.ஆனால் நடப்பாண்டு ஆவணியில் கோடைமழை பெய்யவில்லை. இதனால் சட்டி உழவுக்கு பின் போதிய ஈரம் இல்லாததால் பல் உழவு போடமுடியவில்லை. வேறு வழியின்றி பட்டம் நெருங்குவதால் வறட்டு உழவு செய்து விவசாயிகள் முதல் விதைப்பாக மக்காச்சோளம் விதை ஊன்றுகின்றனர். புரட்டாசி முதல் வாரத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இயற்கையை வழிபட்டு இந்தாண்டு முதல் விதைப்பாக பெண் விவசாயிகள் மக்காச்சோளம் விதை தனியார் விதைக் கடைகளில் விலைக்கு வாங்கி ஏக்கருக்கு எட்டு கிலோ வீதம் விதை ஊன்றுகின்றனர். தொடர்ந்து மழை போக்கு காட்டுவதால் விவசாயிகள் மிகக் கவலையில் உள்ளனர். கடந்த காலங்களில் கூட்டுறவு கடன் சங்கங்களில் நான்கு கிலோ மக்காச்சோளம் விதைப்பை ரூபாய் ஐநூற்று ஐம்பதுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு ஆவணி மாதம் முடியும் நிலையில் இன்னும் மக்காச்சோளம் விதை. கூட்டுறவு சங்கங்களுக்கு மக்காச்சோளம் விதை வரவில்லை. அரசு கூட்டுறவு கடன் சங்கங்களில் மக்காச்சோளம் விதை மற்றும் வெள்ளைச் சோளம், கம்பு, சூரியகாந்தி போன்ற விதைகள் சலுகை விலையில் விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்கிறார்.