செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2025-26-ஆம் ஆண்டு சிறப்பு பருவ மற்றும் ராபி பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Continues below advertisement

விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன ?

பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெல்-II, நெல்-III, நிலக்கடலை மற்றும் கரும்பு பயிர்களுக்கு கீழ்க்கண்ட விவரப்படி பயிர் காப்பீடு செய்யலாம். 

1. நெல்-II - 15.11.2025, (காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி), காப்பீட்டுத் தொகை (ரூ. / ஏக்கர்)- 545

Continues below advertisement

2. நெல்-III, 31.01.2026- 545 ( காப்பீட்டுத் தொகை (ரூ. / ஏக்கர்)

3. நிலக்கடலை, 31.01.2026 - 468 ( காப்பீட்டுத் தொகை (ரூ. / ஏக்கர்)

4. கரும்பு, 31.03.2026, 1260 (காப்பீட்டுத் தொகை (ரூ. / ஏக்கர்)

காப்பீட்டுத் தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு தேவையான ஆவணங்கள் நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவை ஆகும். பதிவு செய்யும்போது விவசாயிகள் பெயர் மற்றும் விலாசம், நிலப்பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிடப்பட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்து கொள்ளவும். 

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில், 2025-26-ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் அக்ரிகல்சுரல் இன்சுரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, அறிவுறுத்தியுள்ளார்.