விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.



விழாக்காலங்கள் என்றாலே காய்கறிகள் மற்றும் பூக்கள் விலை வழக்கத்தை விட அதிகளவில் எகிறிவிடும்.



வழக்கமாக விற்கும் விலையை காட்டிலும் மூன்று மடங்கு பூக்களின் விலை ஏறியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.



கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் இன்று சம்பங்கி பூ கிலோ ரூபாய் 300க்கு விற்கப்படுகிறது.



செவ்வந்தி பூ கிலோ ரூபாய் 180க்கு விற்கப்படுகிறது. ரோஜா கிலோ ரூபாய் 200க்கு விற்கப்படுகிறது.



கிரேந்தி பூ கிலோ ரூபாய் 50க்கும், கிரேந்தி சிவப்பு கிலோ ரூபாய் 40க்கும், சிவப்பு அரளி ரூபாய் 330க்கு விற்கப்படுகிறது.



கோயம்பேட்டில் இன்று காலை நிலவரப்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூபாய் 800 விற்கப்படுகிறது. முல்லைப் பூ ரூபாய் 600 விற்கப்படுகிறது. ஜாதிமல்லி ரூபாய் 450 கிலோவிற்கு விற்கப்படுகிறது.



சம்பங்கி கிலோ ரூபாய் 150க்கு விற்கப்படுகிறது, ரோஜா கிலோவிற்கு ரூபாய் 160 முதல் ரூபாய் 200 வரை விற்கப்படுகிறது.



மதுரையில் ஒரு கிலோ மல்லி ரூபாய் 1200க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஒரு முழம் மல்லிப்பூ ரூபாய் 60 முதல் 80 வரை விற்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



பூக்களின் பிரதான சந்தைகளான தோவாளை மற்றும் மதுரையில் விலை ஏறியுள்ளதால் கோயம்பேடு சந்தையிலும் பூக்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது.