கோப்பையை வென்ற ஆர்.சி.பி மகளிர் அணியினர்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!



WPL 2024இன் இறுதிப்போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது



இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின



டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது



டெல்லி அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை ஸ்கோர் செய்திருந்தது



அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணி வீராங்கனைகள் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்



டெல்லி அணியினரும் கட்டுக்கோப்பாக பந்துவீச முயற்சித்தனர்



19.3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணியினர் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்தது



இதனையடுத்து இந்த சீசனின் கோப்பையை ஆர்.சி.பி மகளிர் அணி வென்றது



மகளிரணி 2வது சீசனிலே சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி. ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது