கிராம்பு அதிகமாக சாப்பிடுகிறீர்களா கவனம் ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கிராம்புகளில் உள்ள யூஜெனால் என்ற பொருள் அதிகமாக உட்கொண்டால் கல்லீரலில் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிக கிராம்பு சாப்பிடுவதால் வயிற்றில் எரிச்சல், அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

சிலருக்கு கிராம்பு அதிகமாக சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்படலாம்.

கிராம்பு ரத்தம் உறைதலைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டிருக்கலாம். எனவே ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சிகிச்சைக்கு முன் அதிக கிராம்பு சாப்பிடுவது ஆபத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கிராம்பு அதிகமாக உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறையும்.

சிறு குழந்தைகள் அதிக கிராம்பு உட்கொண்டால் சுவாசப் பிரச்சினைகள் அல்லது பிற பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

கிராம்பு எண்ணெயை நேரடியாக அதிகமாக பயன்படுத்துவதால் சருமம் அல்லது பற்களில் எரிச்சல் ஏற்படலாம்.

தினமும் 1 அல்லது 2 கிராம்பு சிறிய அளவில் சாப்பிடுவது பொதுவாக பாதுகாப்பானது.

ஆனால் ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் அல்லது மருந்துகள் பயன்படுத்துபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுக் கொண்டு சாப்பிடுவது நல்லது.