அம்மாக்களே.. ஆரோக்கியமாக இருக்க இதையெல்லாம் பாலோ பண்ணுங்க!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால், வாயு, சோர்வு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

வீட்டு வேலைகளில் பிஸியாக இருந்து தண்ணீர் குடிக்க மறந்துவிடாதீர்கள். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.

தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.

வயது ஏற ஏற எலும்புகள் பலவீனமடையும். பால், தயிர், கீரை வகைகள், பேரீச்சம்பழம் போன்ற உணவுகளை உட்கொண்டால் நல்லது.

குடும்பப் பொறுப்புகளால் மன அழுத்தம் ஏற்பட்டால் தியானம், யோகா, திரைப்படம், பயணம் மாதிரியான பிடித்தமான விஷயங்களை செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

இரவில் தாமதமாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. ஒரு நாளைக்கு 7–8 மணி நேரம் தூங்கினால் உடல் மற்றும் மூளை ஓய்வெடுக்கும்.

இரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு, ஹீமோகுளோபின் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியம்.

எண்ணெய் உணவுகள் மற்றும் துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் கொழுப்பு மற்றும் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

அம்மாக்கள் பொதுவாக தங்கள் ஆரோக்கியத்தை கவனிப்பதில்லை. ஒரு நாளில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும், பிடித்தமான விஷயங்களை செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

சிரித்துக்கொண்டு, நேர்மறையாக இருப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே அம்மாக்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

அம்மாக்களின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் உதவி செய்யுங்கள். அவர்கள் இந்த பழக்கங்களை தவறாமல் பின்பற்றுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.