காபி பவுடர் காயங்களை குணப்படுத்துமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் காயங்கள் விரைவில் குணமாகும் என்று சிலர் நம்புகிறார்கள்

அதனால்தான் வீட்டு வைத்தியமாக லேசான காயங்கள் மீது காபி தூளை இன்றும் சிலர் தடவுகிறார்கள்

ஆனால் காபி தூள் காயத்தின் மீது நேரடியாகப் போட்டால் பாக்டீரியா நுழைந்து தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்

சிலருக்கு காபி தூள் காரணமாக தோல் சிவத்தல், எரிச்சல் அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்

ஆழமான காயங்கள், வெட்டுக்கள், தீக்காயங்கள் மீது காபி தூளை பயன்படுத்துவது ஆபத்தானதாக இருக்கலாம்

காபி தூள் இரத்தப்போக்கை நிறுத்தும் என்று சில கூற்றுக்கள் இருந்தாலும் இதை உறுதிப்படுத்த போதுமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை

காயம் ஆற வேண்டுமென்றால் முதலில் சுத்தமான தண்ணீரால் கழுவி தேவைப்பட்டால் ஆன்டிசெப்டிக் பயன்படுத்துவது நல்லது

காபி தூள் ஒருபோதும் சரியான மருத்துவ சிகிச்சைக்கான மாற்று அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

வீக்கம், புண்கள், அதிக வலி இரத்தப்போக்கு அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்