தர்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீரேற்றம் உள்ளது. இதனால், கோடைகாலத்தில் உடலை குளுமையாக வைத்திருக்கும் சிறந்த உணவுப்பொருள் தர்பூசணி ஆகும்.
வைட்டமின் ஏ,பி6, சி, பொட்டாசியம் என பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இந்த தர்பூசணி பழத்தில் உள்ளது.
இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனையும் அதிகரிக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ சருமத்திற்கு நல்லது ஆகும். சருமத்தை பொலிவாக மாற்றும். மேலும், கண்பார்வையையும் அதிகரிக்கச் செய்யும்.
தர்பூசணியில் லைகோபீன் உள்ளது. இது இதய நோய் மற்றும் நாள்பட்ட நோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படும் ஆக்சிஜனேற்றியாகும்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். சுவையும் அருமையாக இருக்கும்.
வெயில் காலத்தில் சாலையோரங்களிலும், பழக்கடைகளிலும் இதன் விற்பனை மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.
.தர்பூசணி சாறு குடிப்பதால் வெயில் காலத்தில் உடல் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.