abp live

மகா சிவராத்திரி - சென்னையில் செல்ல வேண்டிய சிவன் கோயில்கள்!

Published by: ஜான்சி ராணி
abp live

மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை முழு மனதோடு வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.

கபாலீஸ்வரர் கோயில் /  Kapaleeshwarar Temple
abp live

கபாலீஸ்வரர் கோயில் / Kapaleeshwarar Temple

மயிலாப்பூர் என்றாலே கபாலீஸ்வரர் கோயில் தான் நினைவுக்கு வரும். பாடல் பெற்ற தொண்டை நாட்டு கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாக உள்ளது. இங்குள்ள சிவனின் பெயர் கபாலீஸ்வரர், அம்மனின் பெயர் கற்பகாம்பாள். பல்லவர்கள் காலத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி மயிலை கபாலீஸ்வரர் குறித்து பாடல்களை பாடியுள்ளார். 

மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில்
abp live

மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில்

காளஹஸ்தி கோயிலில் உள்ள சிவலிங்கம் போல் சதுர வடிவில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள சிவனின் பெயர் காரணீஸ்வரர், அம்மனின் பெயர் சொர்ணாம்பிகை.

மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில்

இக்கோவிலின் மூலவர் பெயர் மல்லீசுவரர். தாயாரின் பெயர் மரகதாம்பிகை. இப்பகுதியில் மல்லிகை மலர் செடிகள் அதிகம் இருந்ததால் இந்த பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது. மயிலாப்பூர் பஜார் சாலையில், அமைந்துள்ளது. புகழ்பெற்ற பிருகு முனிவர் இந்த கோயிலில் வழிபட்டதாக நம்பப்படுகிறது.

மயிலாப்பூர் விருபாட்சீஸ்வரர் கோயில்

விருபாட்சீஸ்வரர், அம்மனின் பெயர் விசாலாட்சி. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு இறைவனை வழிபாடு செய்த போது, இறைவன் நடராஜா தாண்டவத்தை வெளிப்படுத்தியதாக நம்பப்படுகிறது

மயிலாப்பூர் வாலீஸ்வரர் கோயில்

வாலீஸ்வரர், அம்மன் பெயர் பெரிய நாயகி அம்மன். இந்தக் கோயிலில் உள்ள பஞ்சலிங்கங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோயில்

வெள்ளீஸ்வரர், தாயாரின் பெயர் காமாட்சி அம்மன். கபாலீஸ்வரர் கோவில் அருகிலேயே இந்த கோயில் அமைந்துள்ளது. சுக்ராச்சாரியார் கண் பார்வை பரிபானபோது இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு கண்பார்வையை திரும்ப பெற்றார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தீர்த்தபாலீஸ்வரர் கோயில்

மூலவர் மற்றும் அம்பாள் ஆகிய இருவரும் இரண்டு அடி உயரத்தில் மிகச் சிறிய உருவமாக காட்சியளிப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இங்கு பழங்காலத்தில் 64 வகையான தீர்த்தம் குளங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.

சிவன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது பல்வேறு நன்மைகளை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.