Republic Day 2022: ‘இந்தியாவை ஏன் இவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா?’ - கிரிக்கெட் வீரர்களின் நெகிழ்ச்சி பதிவு

Continues below advertisement

Republic Day 2022: இந்தியா முழுவதும் கடந்த 26ஆம் தேதி நாட்டின் 73ஆவது குடியரசுத் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த குடியரசு தின விழா தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவை அனைத்தும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் அந்த நாட்டு வீரர்களிடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கடிதம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “இந்த கடிதத்தை பெறுவதற்கு நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். எனக்கு இந்தியாவை எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நான் பல நாட்கள் அந்த நாட்டில் மகிழ்ச்சியாக செலவிட நேர்ந்தது. சற்று தாமதம் தான் இருந்தாலும் இந்திய மக்களுக்கு என்னுடைய குடியரசு தின வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram