
Priyansh Arya Profile: CSK - வை அலறவிட்ட இளைஞன்! பஞ்சாப்பின் Rocky Boy! யார் இந்த பிரியான்ஸ் ஆர்யா?
இந்த சின்னப்பையனை ஏன் 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தீர்கள் என்று பஞ்சாப் அணி நிர்வாகிகள் ரிக்கிப் பாண்டிங்கை கடிந்து கொள்ள... இல்லை இவனிடம் ஒரு POTENTIAL இருக்கிறது என்னை நம்புங்கள்.. நான் உங்களுக்கு சத்தியம் செய்து தருகிறேன்.. இவன் நிச்சயம் இந்த ஐபிஎல்லில் முத்திரை பதிப்பான் என்றார் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கிப்பாண்டிங்...அந்த இளைஞன் தான் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி சீட்டுக்கட்டு போல் சரிந்து கொண்டிருக்க மதம் கொண்ட யானை போல் சிஎஸ்கே-வின் பந்தை நொறுக்கிய பிரியான்ஷ் ஆர்யா! யார் இவர்?
பஞ்சாப் அணிக்காக அதிவேக சதத்தை பூர்த்தி செய்த பிரியான்ஷ் ஆர்யா டெல்லியில் பிறந்தவர். இவரது தாயும் தந்தையும் அரசு பள்ளி ஆசிரியர்கள் என்பதால் எப்படியாவது தனது மகனை ஒரு அரசு வேலைக்கு அனுப்பி விட வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. ஆனால் பிரியான்ஷ் ஆர்யாவுக்கோ கல்வியில் சிறிதும் நாட்டம் இல்லை... டெல்லியில் பிறந்து இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சும் விராட் கோலியைப் போல் தானும் ஆகவேண்டும் என்ற ஆசையில் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்த ஆர்யா தனது விருப்பத்தை வீட்டில் சொல்ல... முதலில் வேண்டாம் என்றவர்கள் பின்னர் மகனின் ஆசைக்கு பச்சைக்கொடி காட்டினார்கள்..
இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கான KEY ஆகா இருக்கும் IPL-ல் தொடரில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தின் தனது பெயரை கொடுத்த இவரை யார் ஏலத்தில் எடுக்கவில்லை... ஆனாலும் மனம் உடையாதா பிரியான்ஷ் ஆர்யா தீவிர பயிற்சிகளை மேற்கொண்டார். தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர் வடக்கு டெல்லிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மனன் பரத்வாஜ் எனும் இடது கை சுழற்பந்து வீச்சாளரின் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார்.
இதன் மூலம் போட்டியான சையத் முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஷ்வர் குமார், பியூஷ் சாவ்ல உள்ளிட்ட ஸ்டார் ப்ளேயர்ஸ் இருந்த U-P அணிக்கு எதிராக 43 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் என 103 ரன்களை குவித்தார் பிரியான்ஷ் ஆர்யா. இதன் மூலம் டெல்லி அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக உருவெடுத்த அவர் 7 இன்னிங்ஸ்களில் 166.91 ஸ்ட்ரைக் ரேட்டில் 222 ரன்களை குவித்தார். இவரது இந்த அசுரத்தனமான ஆட்டத்தை கண்ட அஷ்வின் என்னோட நம்பர் ஒன் வீரர் இவர் தான் என்று புகழாரம் சூட்டினார்.
இச்சூழலில்தன் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் பிரியான்ஷ் ஆர்யா ஏலத்திற்கு வந்தார். டெல்லி, பெங்ளூரு அணிகள் போட்டி போட்டாலும் கடைசியாக இவரை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. 3 கோடிக்கு இந்த சின்னப்பையனை ஏலத்தில் எடுத்த முடிவு சரிதான என்று பஞ்சாப் அணி நிர்வாகிகள் குழம்பிபோய் இருக்க என்னை நம்புங்கள் இந்த பையனிடம் ஒரு திறமை இருக்கிறது. இவன் நிச்சயம் இந்த ஐபிஎல்-ல் முத்திரை பதிப்பான் என்று விடாப்பிடியாக இருந்து ஏலத்தில் எடுக்க வைத்தார் ரிக்கிப்பாண்டிங்க். இன்றைக்கு ரிக்கப்பாண்டிங் பெயரை காப்பாற்றியதோடு சிஎஸ்கே அணிக்கு எதிரன அதிவேக சதத்தின் மூலம் தன்னுடைய பெயரையும் முத்திரையாய் பதித்து விட்டார் பிரியான்ஷ் ஆர்யா.