முட்டி மோதிய ட்ரம்ப்..தட்டி தூக்கிய மரியா... நோபல் பரிசும் அரசியலும் | Trump Vs Maria Corina Machado

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பிய நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு கிடைத்ததுள்ளது. இந்தநிலையில் தனது அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் மரியா அர்ப்பணித்தார். நோபல் குழு ட்ரம்ப்பிற்க்கு பதிலாக மரியா கொரினா மச்சாடோவை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

​மரியா கோரினா மச்சடோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கான முக்கியக் காரணம் சர்வதேச சமூகத்தின் பெரும்பகுதியினரால் அவர்தான் சரியான வெற்றியாளராகக் கருதப்பட்டார். வெனிசுலாவில் பல ஆண்டுகளாக நிலவி வரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக உரிமைகள், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்காகவும் அவர் மேற்கொண்ட அமைதியான மற்றும் அசைக்க முடியாத போராட்டத்தை நோபல் கமிட்டி அங்கீகரித்தது.

வெனிசுலா மக்களுக்கு சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கு அவர் மேற்கொண்ட போராட்டத்திற்கும், நோபல் குழு அவரது அயராத உழைப்பை பாராட்டியது.

அவர் கடுமையான மிரட்டல்கள், அரசியல் அழுத்தங்கள் மற்றும் தடைகளை எதிர்கொண்டபோதிலும், வெனிசுலாவில் ஜனநாயகம் மலர அமைதியான வழியில் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது போராட்டம் வெனிசுலா மக்களுக்கு நம்பிக்கையையும், உலகளாவிய அளவில் ஜனநாயகப் போராட்டக்காரர்களுக்கு ஒரு உத்வேகத்தையும் அளிப்பதாக நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

​சுருக்கமாக, வெனிசுலாவில் சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக அவர் அமைதியான வழியில் தொடர்ந்து போராடியதற்காகவே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ​நோபல் பரிசைத் தனக்கு வழங்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், கமிட்டி மச்சடோவின் போராட்டத்தைப் பாராட்டி அவருக்குப் பரிசை அறிவித்தது.

இதுக்குறித்து ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது..நோபல் பரிசு பெற்றவர் இன்று என்னை அழைத்து, நீங்கள் தான் உண்மையிலேயே அந்த விருதுக்கு தகுதியானவர். உங்களை மதிக்கும் விதமாக இந்த விருதை நான் பெற்றுக்கெள்கிறேன் என்று கூறினார்... ஆனால், எனக்குக் கொடுங்கள் என்று நான் சொல்லவில்லை. அவங்க விருப்பபட்டு சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்... நான் அவங்களுக்கு உதவி செய்து வருகிறேன்... மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்...என தெரிவித்துள்ளார்."

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola