ABP News

Srirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

Continues below advertisement

ஸ்ரீரங்கத்தில் பட்ட பகலில் 5 க்கும் மேற்பட்ட பேர் கொண்ட கும்பல் நடு ரோட்டில் இளைஞரை துடிக்க துடிக்க வெட்டி படுகொலை செய்த வெறிச்செயல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் வீடியோ காட்சி வெளியாகி நெஞ்சை பதற செய்துள்ளது.

திருச்சி மாநகர் ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த தர்மராஜின் மகன் அன்பு என்கிற அன்புராஜ். இவர் சி பிரிவு குற்றவாளியாவார். 
இந்நிலையில் இன்று காலை அவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் அருகே வாகன நிறுத்திமிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 5 க்கும் மேற்பட்ட  கும்பல் பட்டப்பகலில் அன்புராஜை சரமாறியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பு ராஜின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் அன்பு ராஜன் உறவினர்கள் நண்பர்கள் என 100க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் வேடுபறி நிகழ்ச்சியில் அன்புராஜ் முறை வாங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழி சண்டையால் ஏற்பட்ட பிரச்சனையால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து அன்புராஜை கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர். பட்டப் பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொலை சம்பவம் பொது மக்களிடையேயும் ஸ்ரீரங்கத்திற்கு வரும் பக்தர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola