Trichy Railway station|ஓடும் ரயிலில் இறங்கிய நபர் நொடிப்பொழுதில் விபரீதம்.. ஜங்சனில் திக் திக்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிருச்சியில் ஓடும் ரயில் இறங்க முயன்று ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் ரயில்வே துறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் இன்று காலை காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது ரயில் நடைமேடையில் நிற்பதற்கு முன்பாகவே அவர் ரயிலில் இருந்து இறங்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்து நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதைப் பார்த்ததும் அருகில் இருந்த ஊழியர்கள் ரயில் ஓட்டுனருக்கு உடனடியாக தகவல் கொடுத்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் ஜெயச்சந்திரன் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பயணிகள் ஜெயச்சந்திரனை உடனடியாக மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காலையிலே பரபரப்பான சூழல் நிலவியது. ரயில் நின்ற பிறகே பயணிகள் ஏறவோ, இறங்கவோ வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.