நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதுங்கி இருந்த பாம்பு. மீட்பு குழுவினர் மீட்ட போது பாம்பு நாக்கை நீட்டிய படி போஸ் கொடுத்து அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது.

திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே 2 அடி நீளம் உள்ள பாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனை அங்கு பணியில் இருந்த துப்புரவு பணியாளர்கள் பார்த்து அச்சமடைந்து அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற மீட்பு குழுவினர் இடுக்கி வைத்து பதுங்கி இருந்த தண்ணீர் பாம்பை லாவகமாக மீட்டனர். அவர்கள் பாம்பை எடுத்து சென்ற போது நாக்கை நீட்டிய படி போஸ் கொடுத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதுங்கி இருந்த பாம்பு. மீட்பு குழுவினர் மீட்ட போது பாம்பு நாக்கை நீட்டிய படி போஸ் கொடுத்து அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது.

திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே 2 அடி நீளம் உள்ள பாம்பு பதுங்கி இருந்துள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola