Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’ வடிவேலு பாணியில் ரகளை! மதுபிரியர் அட்ராசிட்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிருநெல்வேலியில் நள்ளிரவில் போதை ஆசாமி ஒருவர் கள்ளக்குறிச்சி கள்ள சாராயம், அண்ணாமலை கொடுத்த கள்ளச்சாராயம், நயினார் நாகேந்திரன் கொடுத்த பணம் ராபர்ட் ப்ரூஸ் கொடுத்த பணம் எல்லாம் கார் உள்ளே தான் இருக்கு எடுத்துக்கோங்க எனக் கூறி போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவில் மேலப்பாளையம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கார் ஒன்றின் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருக்க அவரை விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த நபர் வடிவேலு பாணியில் சிங்கமுத்து குரலில் ரவுசு காட்டியுள்ளார்.
’’தான் மது அருந்தியதாகவும், போதை ஏற்பட்டதால் காரினை ஓட்ட முடியாமல் காரினை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருப்பதாகவும் பாவமாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து திடீரென ஆக்ரோசமாகி என்னை நீங்கள் என்ன செய்து விடுவீர்கள்? ஜெயிலில் கொண்டு போடுவீர்களா ?ஜெயிலில் கொண்டு போடுங்கள் என தான் அணிந்திருந்த சட்டை கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் என ஒவ்வொன்றாக கழட்டி வீசியுள்ளார். இச்சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியையும் நகைப்பையும் ஏற்படுத்தியது.
மேலும் ‘’நான் யாரிடமும் தகராறு செய்தேனோ ?அடுத்தவன் மனைவியை கையைப் பிடித்து இழுத்தேனா ?எனக்கு ஒன்றும் தேவையில்லை, காலையில் என்னை கோர்ட்டில் கொண்டு போய் அடையுங்கள், நான் எதுவும் தவறாக பேசியிருந்தால் என்னை செருப்பால் அடியுங்கள் என போதையில் புலம்பியுள்ளார்.
இந்நிலையில் போலீசார் விசாரணையில் இவர் பெயர் ரவிசங்கர் என்பதும் திருநெல்வேலியை அடுத்த சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.