கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா

Continues below advertisement

திருமாவளவனிடம் இருக்கும் 2 MLA-க்கள் தான் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்யப் போகிறார்கள். யார் CM என்பதை கைகாட்டும் கிங்மேக்கராக மாறியிருக்கிறார் திருமா.

சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேர்தல் முடிவுகள் வெளியாகியும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 108 இடங்களை கைப்பற்றிய தவெக கூட்டணி ஆட்சி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் ஆதரவு கொடுத்த நிலையில் தற்போது தவெக வசம் 116 MLA-க்கள் இருக்கின்றனர். இன்னும் 2 இடங்கள் இருந்தால் தான் விஜய் CM ஆக முடியும் என்ற சூழல் இருக்கிறது.

தற்போது விசிக கையில் இருக்கும் 2 MLA-க்கள் தான் ஆட்சியமைப்பது யார் என்பதை முடிவு செய்யப் போகிறார்கள். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும் என விசிக MLA வன்னி அரசு பதிவிட்டுள்ளார். விஜயிடம் துணை முதலமைச்சர் பதவியை திருமா கேட்பதாக தகவல் வெளியான நிலையில் வன்னி அரசு பதிவு கவனம் பெற்றுள்ளது. 

எம்மை- ஓரங்கட்ட நினைத்தாலும் ஒதுக்க நினைத்தாலும் நாங்களே மைய்யம் என்பதை தீர்மானிப்போம் என்றும் வன்னி அரசு பதிவிட்டுள்ளார். இந்தநிலையில் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க திருமா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஆதரவு கடிதத்தை தவெகவுக்கு கொடுத்த பிறகு, விஜய் ஆளுநரை சந்திக்கவிருப்பதாக சொல்கின்றனர்,

நேற்று விசிகவில் நடந்த மீட்டிங் முடிவதற்கு இரவு ஆகிவிட்டதாகவும், ஆதரவு கடிதம் கொடுப்பதற்காக வன்னி அரசு இன்று சென்னை வருவதாக விசிக வட்டாரத்தில் தகவல் கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட்கள் போல் இல்லாமல் அதிகாரத்தில் பங்கு என்பதை நோக்கி நகர்ந்துள்ளது விசிக. 20 பேர் கட்சி என தவெகவினர் விமர்சித்த விசிக தான் தற்போது ஆட்சியமைக்க உதவுவதாக அக்கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola