கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்னர் முதல்முறையாக அங்கு செல்லும் முதலமைச்சர் விஜய், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, 41 பேர் கூட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விஜய் அச்சம்பத்துக்குப் பின்னர் முதல்முறையாக கரூர் செல்லப்போவதாக தகவல் வெளியானது. மேலும், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படவிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கரூரில் நாளை அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், கொட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பனி நியமன ஆணையை வழங்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது குறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், "முதலமைச்சர் விஜய் அவர்கள் கரூர் மாவட்டத்திற்கு ஜூலை 10-ம் தேதியன்று வருகை புரிந்து கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மனவாசி ஊராட்சியில் ரூ. 1700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத (Non-Leather) காலணிகளை உற்பத்தி செய்யும் என்ற புதிய தனியார் தொழிற் சாலைக்கு, முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி சிறப்பிக்க உள்ளார்.
இந்தத் தொழிற்சாலை மூலம் சுமார் 13,500 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள். இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருனை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிராக சென்னை உய்ரநீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தது.