Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

Continues below advertisement

தவெக-வை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயன்று வருவதாக பேச்சுக்கள் அடிபடும் நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக 3-ம் கட்ட விசாரணைக்கு ஆஜரான விஜய்யிடம், சிபிஐ அதிகாரிகள் 7 மணிநேரம் விசாரணை நடத்தியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதில், தவெக தலைவர் விஜர் கடந்த ஜனவரியில் இரண்டு முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆகியிருந்தார். மொத்தமாக சுமார் 13 மணிநேரம் விஜய்யிடம் விசாரனை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மூன்றாவது முறையாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மார்ச் 10-ம் தேதி சிபிஐ தரப்பிலிருந்து விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.

மேலும், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியிருக்கிறது.

கட்சிப் பணிகள் காரணமாக விசாரணைக்கு விஜய் 15 நாள்கள் அவாகசம் கேட்டார்.

இருப்பினும் அதை ஏற்க மறுத்த சிபிஐ மார்ச் 15-ம் தேதியே ஆஜராகுமாறு கூறிவிட்டது.

அதன்படி, நேற்று மாலையே தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார் விஜய்.

அவருடன், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர் நிர்மலா குமார் உள்ளிட்டோர் சென்றனர்.

இந்த நிலையில், 3-ம் கட்ட விசாரணைக்காக இன்று காலை 11 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார்.

அவரிடம் சுமார் 7 மணிநேரம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கரூரில் கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்?

மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தது தான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமா?

நெரிசலை கட்டுப்படுத்த ஏன் முயற்சி எடுக்கவில்லை?

செந்தில் பாலாஜிக்கு இந்த சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்?

எதனடிப்படையில் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கிறீர்கள்? என விஜய்யிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

கேள்விகள் அனைத்திற்கும் நிதானமாகப் பதிலளித்த விஜய் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்திலிருந்து காரில் வெளியே வரும்போது காரின் சன்ரூப் வழியாக தனது தொண்டர்களுக்கு சிரித்தவாறே கையசைத்துச் சென்றார்.

விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காகத்தான் சிபிஐ மூலம் பாஜக அழுத்தமா கொடுத்து வாருவதாக பேச்சுக்கள் அடிபடும் நிலையில், விஜய்யிடம் இந்த 7 மணிநேர சிபிஐ விசாரணை அரசியல் வட்டாரங்களில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola