+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
சிவகங்கையில் அரசு பள்ளி வளாகத்திற்குள் 12 ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையை அடுத்துள்ள நிரஞ்சான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம், பானுமதி தம்பதியர். ராஜாங்கம் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அந்த 17 வயது மகன் ஓர் மாற்று திறனாளி. அவர் அருகில் உள்ள மல்லல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு அந்த பள்ளியில் பயிலும் சக மாணவர்களுடன் ஏற்கனவே தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவனை அங்கு தயார் நிலையில் இருந்த எதிர் தரப்பு மாணவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக 4 இடங்களில் குத்தியுள்ளனர்.
இதனை அடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு மாணவனை மட்டும் பிடித்து போலிசிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடம் வந்த மானாமதுரை போலீசார் பிடிபட்ட மாணவனிசம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
12 ஆம் வகுப்பு மாணவனை அரசு பள்ளி வளாகத்திற்குள்ளேயே வைத்து சக மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.