
Panguni Uthiram Police Issue : ”பெரிய ம***டா நீ.. போடா” பக்தரை கெட்ட வார்த்தையில் திட்டிய போலீஸ்
”கழுத்த புடிச்சு வெளியில தள்ளுங்கடா அவன.. பெரிய மயிரு மாறி பேசுற.. போடா டே போட...செருப்பால அடிப்பேன் உன்ன..” என்று கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த பக்தர் ஒருவரை ஜீயபுரம் DSP பழனி ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், பக்தர்களை இழிவு படுத்திய டிஎஸ்பி பழனி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பங்குனி உத்திர திருவிழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள் பாலித்த தலமான திருச்சி மாவட்டம் குமார வயலூர் முருகன் கோவிலிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பகதர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்தர் ஒருவர் குடும்பத்துடன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துக் கொண்டு வரிசையில் நின்றுள்ளார். அந்த நபர் காவல்துறையிடம் சென்று வெயில் அதிகமாக இருக்கிறது சிறிது சிறிதாக மக்களை உள்ளே அனுப்புங்கள் என என கூறியுள்ளார்.
இதனை அடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜீயபுரம் டிஎஸ்பி பழனி என்பவர் , ”கழுத்த புடிச்சு வெளியில தள்ளுங்கடா அவன.. பெரிய மயிரு மாறி பேசுற.. போடா டே போட...சட்டம் பேசுறான் ..செருப்பால அடிப்பேன் உன்ன..” ஒருமையக பேச மற்றொரு காவலர் பக்தரை தள்ளிவிடுகிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வ ந்த பக்தரை ஒருமையில் பேசியதோடு.. செருப்பால் அடிப்பேன் என்று சொல்கிறார் டிஎஸ்பி பழனி இவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருமையில் பேசியதால் டி ஐ ஜி வருண்குமார் நடவடிக்கை எடுத்திருந்தார். தற்போது டிஎஸ்பி பழனி ஒருமையில் பேசியதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினமும், டிஐஜி வருண்குமாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பலரும் கோரிக்கையாக உள்ளது.