நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!

Continues below advertisement

நாகர்கோவிலில் சிறையில் உயிரிழந்த விசாரணைக் கைதியின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வில் தெரியவந்த நிலையில், போலீஸ் அதிகாரிகள் 3 பேர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் தாமரை குளம் பகுதியில் கடையில் குட்கா விற்பனை செய்ததாக அந்த பகுதியை சேர்ந்த கடைக்காரர் சபரிவர்மன் என்பவரை தென் தாமரை குளம் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், கடந்த 9 ஆம் தேதி விசாரணை கைதியாக நாகர்கோவில் ஜெயிலில் போலீஸார் அடைத்தனர்.

ஆனால், விசாரணையின்போதே திடீரென சிறையில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து போலீஸ் தரப்பு, உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தது.

இருப்பினும், சபரிவர்மனை போலீஸார் கடுமையாக சிறையில் அடித்தே கொன்றுவிட்டதாக அவரின் குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இச்சம்பவம் பூதாகரமாக வெடிக்கவே, சீமான், உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சம்பத்தப்பட்ட போலீஸாரைக் காப்பாற்றாமல் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இந்த நிலையில், மாவட்ட ஈதிபதி முன்னிலையில் நேற்று நடைபெற்ற உடற்கூராய்வில், சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதன்காரணமாக, சம்பத்தப்பட்ட போலீஸாரைக் கைதுசெய்யும் வரையில் உடலை வாங்க மாட்டோம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த நிலையில், சபரிவர்மன் அடைக்கப்பட்ட சிறையின் தலைமை வார்டன் ஜெகன் மற்றும் வார்டன்கள் சிவகுமார், திருவிடைநம்பி ஆகிய 3 பேர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola