
Maharashtra : Maharashtra Women Scheme.. பணத்தை திருப்பி கேட்ட அரசு! அதிர்ந்து போன பெண்கள்!
பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கி வரும் மகாராஷ்ட்ரா அரசு இதில் பயன்பெற்ற, 4 ஆயிரம் பெண்களிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக லட்கி பஹின் யோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள 21 முதல் 65 வயதுடைய ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டடத்தை அறிமுக படுத்தியது.
இந்த திட்டம் பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றது,. மஹாயுதி கூட்டணியின் வெற்றிக்கு இந்த திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்தியது தான் முக்கிய காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறினர்.
இதனிடையே ஆளும் அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவசர அவசரமாக இந்த திட்டத்தை அமல்படுத்துகிறது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத பாஜக அரசு உடனடியாக இந்த திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கி கணக்கில் 1500 ரூபாயை வரவு வைத்தது.
இந்த நிலையில் தான் இந்த திட்டத்தில் பயன் பெற்ற 4 ஆயிரம் பெண்களிடம் வரவு வைத்த பணத்தை திருப்பி கேட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வாக்களித்த பெண்களை அவமானப்படுத்தும் இந்த செயலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளது,.
இச்சூழலில் இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிதி தட்கரே பேசுகையில், “ நாங்கள் தரவுகளை சரிபார்த்து வருகிறோம். 2.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனர். கார் வைத்திருக்கும் பெண்களும் இந்த திட்டத்தில் பயன் பெற்றி வருவதாக புகார்கள் வந்துள்ளன. மாகாராஷ்டிராவிற்கு வெளியே வசிக்கும் பெண்களும் இதில் பலன் பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. தகுதியற்ற பெண்கள் தாங்களே முன்வந்து பணத்தை திருப்பி தருகின்றனர். ”என்று கூறியுள்ளார்.