Kallakurichi kalla sarayam : 'சாராயம் குடிச்சேன்! ஒன்னுமே முடியல” உயிரிழந்தவரின் கடைசி VIDEO
Download ABP Live App and Watch All Latest Videos
View In App"சாராயம் குடிச்சேன்! ஒன்னுமே முடியல” உயிரிழந்தவரின் கடைசி VIDEO
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த கந்தன் என்பவர் உடல்நிலை தொடர்பாக கடைசியாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கருணாபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்தநிலையில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த கந்தன் என்பவரின் கடைசி வீடியோ வைரலாகி வருகிறது. கருணாபுரத்தை சேர்ந்த கந்தன் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதும் வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தனுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும் இவரின் உழைப்பில் தான் குடும்பம் நடைபெறுவதாகவும், இனி வாழ்வாதாரத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.