CM விஜய்க்கு மிரட்டல் திமுக MLA அதிரடி கைது கனிமொழி கடும் கண்டனம்

Continues below advertisement

முதலமைச்சர் விஜய்க்கு எதிராக பொதுக்கூட்ட மேடையில் பகிரங்க மிரட்டல் விடுத்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனை போலீஸார் அதிரடியாக கைதுசெய்துள்ளனர். இச்செயலுக்கு திமுக எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யை, திமுக மூத்த தலைவர்களான ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக ஒருமையில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்புகூட, பொதுக்கூட்டமொன்றில் விஜய்யை அவதூறாகப் பேசியதற்காக திமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் ஜூலை 3-ம் தேதி கைதானார். பின்னர் அன்றே ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக MLA மார்க்கண்டேயன், "மானங்கெட்ட முதலமைச்சர் உன்னை சட்டமன்றத்தில் வைத்து பார்த்துக்கொள்கிறோம்டா, சட்டமன்றத்தை பூட்டுனா உனக்கு எலும்பு இருக்காது" ஒருமையில் பேசி பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

மார்க்கண்டேயனின் இத்தகைய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில், தவெக-வினர் இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை அவரது வீட்டில் வைத்து அவரைக் கைது செய்தனர் 

அப்போது மார்க்கண்டேயன், "நான் MLA. சபாநாயகர் அனுமதி இல்லாம என்னை கூட்டிட்டுப் போக முடியாது" என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் போலீஸாருடன் காரில் அவர் ஏறியபோது அவரின் ஆதரவாளர்கள், "காவல்துறை சர்வாதிகாரம் ஒழிக... தவெக ஏவல்துறை" என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி மார்க்கண்டேயனை காரில் அழைத்து சென்றனர்.

இந்தக் கைது சம்பவம் பேசுபொருளாகியிருக்கும் நிலையில் திமுக எம்.பி கனிமொழி, "அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுக-வினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola