Accident News : BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

Continues below advertisement

தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் கல்லூரி மாணவன் பலி சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே ஆவுடையார்பாறை பகுதியைச் சேர்ந்தவர்  நந்தகுமார். இவர் நேற்று ஆவுடையார் பாறையில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு செல்லும்போது ஈரோடு -கரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நொய்யல் குறுக்குச்சாலை இந்திய அரசுக்கு சொந்தமான வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது  கரூரில் இருந்து ஈரோடு நோக்கி அதி வேகமாக வந்த தனியார் பேருந்தும் ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதியது. இதில் நந்தகுமார் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு பேருந்தால் இழுந்து செல்லப்பட்டது.

 

இதில்  பேருந்தின் முன் பகுதி சிதைந்து போனது. ஸ்கூட்டர் சுக்கு நூறானது. விபத்து ஏற்பட்டதில் நந்தகுமாருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  ஓடிவந்து ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நந்தகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நந்தகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நந்தகுமாரின் தந்தை கணேசன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கருணாநிதி பேருந்தை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுனர் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு சென்னிமலை தெருவைச் சேர்ந்த  மகேஷ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தனியார் பேருந்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இருசக்கர வாகனமும் தனியார் பேருந்தும் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram