
Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்
ஆவடி இரட்டைக் கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராம் ஆயில்சேரி பகுதியைச் சேர்ந்த இரட்டைமலை சீனிவாசன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், முன்பகை காரணமாக இக்கொலை சம்பவம் நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆயில்சேரி வழியாக சென்ற சோரான்சேரி இளைஞர்களை அண்ணன் இரட்டைமலை சீனிவாசன் மற்றும் தம்பி ஸ்டாலின் ஆகியோர் தாக்கியதால் முன் விரோதம் ஏற்பட்டு கொலை நடந்தது தெரிய வந்தது. இந்நிலையில், ஆவடி இரட்டைக் கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆவடி இரட்டைக் கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராம் ஆயில்சேரி பகுதியைச் சேர்ந்த இரட்டைமலை சீனிவாசன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், முன்பகை காரணமாக இக்கொலை சம்பவம் நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆயில்சேரி வழியாக சென்ற சோரான்சேரி இளைஞர்களை அண்ணன் இரட்டைமலை சீனிவாசன் மற்றும் தம்பி ஸ்டாலின் ஆகியோர் தாக்கியதால் முன் விரோதம் ஏற்பட்டு கொலை நடந்தது தெரிய வந்தது. இந்நிலையில், ஆவடி இரட்டைக் கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.