Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJP
சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்கு வந்த நிர்வாகியிடமிருந்து கேபி.ராமலிங்கம் சால்வையை பறித்த போது நிர்வாகி தடுமாறி கீழே விழ சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஐந்துரோடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் வருகை தந்திருந்தார். அப்போது அவருடன் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கேபி.ராமலிங்கம் வருகை தந்தார். அப்போது பாஜக கட்சியினர் மேலே நிற்க வேண்டாம் கீழே செல்லுமாறு மிரட்டல் விடுவது போன்று பேசியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பாஜகவின் முன்னாள் மாவட்ட பார்வையாளர் முருகேசன் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்கு காத்திருந்தார். அப்பொழுது வேகமாக சென்ற கேபி.ராமலிங்கம் அவரது சால்வையை பிடுங்கிய போது கீழே விழுவது போன்று நிலைத்தடுமாறினார்.
பாஜகவினரிடையே பாஜக மாநில துணைத்தலைவர் கேபி.ராமலிங்கத்தின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் பாஜகவினர் கேபி.ராமலிங்கத்தின் செயல்பாட்டை கண்டித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.