Vijay bussy anand | விஜய்க்காக உழைச்சதே WASTE புஸ்ஸி-யிடம் மல்லுக்கட்டிய பெண்! காரசார வாக்குவாதம்

Continues below advertisement

எங்க சொத்தை வித்து  தான் விஜய் மக்கள் இயக்கத்திற்காக வேலை செஞ்சோம் ஆனா என் தம்பிக்கு பதவி கொடுக்கவில்லை என்று பெண் ஒருவர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம்ன்மு றையிட்டபோது பவுன்சர்கள் குண்டுக்கட்டாக அப்பெண்ணை இழுத்து சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது. 


கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு தான் தொடங்கியது. இதனால் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நலத்திட்ட உதவிகள் வாங்கும் பொது மக்களை காக்க வைத்தனர்.

மாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடை அருகில் பெண் ஒருவர் தன்னுடைய அண்ணன் சொத்தை விற்று விஜய் மக்கள் இயக்கத்தை வளர்த்தவர், ஆனால் அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளது ஏன்? எனவும் தங்கள் நிலத்தில் தான்  விஜய் மக்கள் இயக்கம் கட்டிடம்  இருப்பதாகக் கூறி அந்தப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அப்போது மேடையில் இருந்த புஸ்ஸி.ஆனந்த் இது குறித்து விசாரிப்பதாக கூறினார். ஆனால் அந்த பெண் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் புஸ்ஸி.ஆனந்துக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த பவுன்சர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து இழுத்து சென்று, மண்டபத்தில் உள்ள கண்ணாடி அறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம் விசாரித்த போது , புஸ்ஸி ஆனந்திடம் முறையிட்ட பெண் பெயர் புஷ்பா எனவும், இவரது அண்ணன் தங்கதுரை விஜய் ரசிகர் மன்றம் தொடங்கிய காலத்தில் இருந்து தஞ்சை மாவட்ட தலைவராக இருந்தார். தற்போது வரை விஜய் மக்கள் இயக்கத்தில் மாநகர தலைவராக இருந்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்திற்காக தன்னுடைய இடத்தை விற்று செலவு செய்ததாகவும், இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தொடங்கிய பிறகு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அவரது தங்கை புஷ்பா மாநில பொதுச் செயலாளரிடம் முறையிட்டதாக தெரிவித்தனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram