ABP News

வேங்கைவயல் கிளம்பும் விஜய்! MEETING-ல் பக்கா ஸ்கெட்ச்! ஜான் ஆரோக்கியசாமி ஐடியா

Continues below advertisement

பரந்தூரில் கள அரசியலை ஆரம்பித்து வைத்த விஜய், அடுத்ததாக வேங்கைவயலுக்கு செல்ல தயாராகி வருவது அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியிடம் பேசி முக்கியமான ஸ்கெட்ச் ஒன்றை போட்டுள்ளார் விஜய். 

விஜய் தவெக என்ற கட்சியை ஆரம்பித்ததில் இருந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு கூட வெளியில் செல்லவில்லை. இதனால் WORK FROM HOME அரசியல்வாதி என்று ஆளும் திமுக விஜயை கடுமையாக விமர்சனம் செய்தது. 

இச்சூழலில் தான் விஜயின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கிய சாமியுடன் விஜய் ஒரு மீட்டிங்கை போட்டிருக்கிறார். அப்போது நாம் இப்படியே அரசியல் செய்தால் வேலைக்கு ஆகாது. உடனடியாக களத்தில் இருங்க வேண்டும் என்ற ஐடியாவை ஜான் கொடுக்க... களத்தில் இறங்குவது பிரச்சனை இல்லை.. எங்கே இருந்து அதை தொடங்குவது என்று விஜய் கேட்டதாகவும்... பரந்தூர் விமான நிலைய விவகாரம், வேங்கைவயல் விவகாரம், அரிட்டாப்பட்டி விவகாரம் என மூன்று முக்கிய போராட்டங்களுக்கு இன்னும் விடைகிடைக்கவில்லை இதை கையில் எடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று அந்த மீட்டிங்கிள் ஜான் ஆரோக்ய சாமி விஜயிடம் சொல்லி இருக்கிறார். முதலில் பரந்தூரில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று ஜான் ஆரோக்கிய சாமி சொன்னதாகவும் அதன்படி விஜயும் அதையே செலக்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

முன்னதாக தங்களது கட்சி முதல் மாநாட்டில் பரந்தூர் விமான  நிலைய திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்று தவெக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தான் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி பரந்தூரில் இருந்து ஆரம்பிப்பது தான் சரியாக இருக்கும் என்று விஜயும் பரந்தூருக்கு விசிட் அடித்தார். தமிழகம் மட்டுமின்றி இந்த செய்தி நேசனல் நியூஸானது. இதில் நல்ல ரிசல்ட் தவெகவிற்கு கிடைக்கவே.. அடுத்த விசிட் எங்கே என்ற கேள்வி எழுந்தது.


இந்த நிலையில் தான் தன்னுடைய அடுத்த விசிட்டாக வேங்கை வயலை விஜய் செலக்ட் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் வாய்ஸ் ஆப் காம நிறுவனத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில் அண்ணன் விஜய் வேங்கை வயலுக்கு நேரடியாக சென்று அங்குள்ள பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று பேசி இருந்தார். அதேபோல் அந்த மேடையில் வேங்கை வயல் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மக்களும் கௌரவிக்கப்பட்டனர். இச்சூழல் தான் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காமல் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாய் களத்திற்கு சென்று குரல் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அடுத்தடுத்த விசிட் மூலம் work from politics விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளார். 2026 தேர்தலை குறிவைத்து இறங்கியுள்ள விஜய், அதனை நோக்கி காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார். அதுவும் அரசுக்கு எதிராக இருக்கக் கூடிய முக்கிய பிரச்னைகளை குறிவைத்து அவர் களமாடிவருவது விஜய்க்கு பெரிய ப்ளஸாக இருக்கும் என சொல்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola