Udhayanidhi stalin | உதயநிதிக்காக கிடா விருந்து! உருகி வேண்டிய கவுன்சிலர்! படையெடுத்த மக்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉதயநிதி துணை முதல்வராக வேண்டுமென்று திமுக ஒன்றிய கவுன்சிலர் கிடாய்களை வெட்டி அசைவ விருந்து வைத்து வழிபாடு நடத்திய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற குரல் கடந்த சில நாட்களாக திமுக வட்டாரத்தில் அதிகம் எழுந்து வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்களும் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவினர் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பிலேயே வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இந்தநிலையில் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் ஒருபடிமேலே போய் உதயநிதி துணை முதல்வராக வேண்டி கிடா விருந்து வைத்து வழிபாடு நடத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி சாத்தையா, இவர் இளையான்குடி தி.மு.க., ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் அய்யம்பட்டி கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் 15க்கும் மேற்பட்ட கிடாய்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கறி விருந்து வைத்து வழிபாடு நடத்தியுள்ளார். மேலும் சாலைகிராமம் மற்றும் இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் குடும்பத்தோடு கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் வழிபாடும் நடத்தியுள்ளார். இந்த கறிவிருந்தில் இளையான்குடி, சாலைகிராமம், அய்யம்பட்டி சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என திமுகவினர் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வரும் நேரத்தில், கவுன்சிலர் கிடா விருந்தே வைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.