ABP News

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்

Continues below advertisement

செங்கோட்டையன் இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விவகாரமே அதிமுக வட்டாரத்தில் அடங்காத நிலையி, இபிஎஸ்-ன் வலதுகரமான தங்கமணியும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை புறக்கணித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே 2 பேருக்கும் இடையே இருந்த மோதல் தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்காக வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய புள்ளிகள் தலைமை அலுவலகத்தில் குவிந்த நிலையில் 2 பேர் மட்டும் அந்தப் பக்கமே வராமல் தவிர்த்தனர். ஒன்று செங்கோட்டையன் மற்றொன்று தங்கமணி.

செங்கோட்டையன் ஏற்கனவே இபிஎஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை தவிர்த்தது பூகம்பமாக வெடித்தது. கோவையில் நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறாததால் தான் நிகழ்ச்சியை புறக்கணித்ததாக சொன்னார் செங்கோட்டையன். இந்த விவகாரம் பற்றி அதிமுகவினரிடம் கேட்கும் போது மழுப்பான பதிலை கொடுத்து வந்தனர்.

இந்தநிலையில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் தங்கமணியும் அதனை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளதாகவும், அதனால் தான் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும் சொல்கின்றனர். இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அவருக்கு வலதுகரமாக இருந்தவர் தான் தங்கமணி. இபிஎஸ்-ன் சம்பந்தி வழி உறவினர் என்பதாலும் இருவருக்கும் நெருக்கம் அதிகம். இபிஎஸ் ஆட்சியின் போது அவருக்கு நிதியுதவி செய்தது, தனது லாபிகளை வைத்து இபிஎஸ்-க்கு தேவையானவற்றை செய்வது என தங்கமணி தான் பின்னிருந்து நிறைய வேலைகளை முடித்ததாக பேச்சு இருக்கிறது.

ஆனால் தற்போது தன்னையே ஓரங்கட்டிவிட்டு மற்றவர்களுக்கு இபிஎஸ் முக்கியத்துவம் கொடுப்பதால் தங்கமணி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கு தங்கமணியிடம் தான் ஓபிஎஸ் தரப்பு சென்றதாக கூறப்படுகிறது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்பதற்கு தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தியும் இபிஎஸ் விடாப்பிடியாக இருந்ததும் தங்கமணிக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

மக்களவை தேர்தல் சமயத்தில் திருச்சி தொகுதியில் யாரை களமிறக்குவது என்பதில் தங்கமணி, விஜயபாஸ்கர் இடையே மோதல் நடந்து வந்துள்ளது. தங்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த போது, விஜயபாஸ்கர் சொன்ன கருப்பையாவுக்கே இபிஎஸ் டிக் அடித்ததால் தங்கமணி ஆத்திரம் அடைந்துள்ளார். இப்படி அடுத்தடுத்து இபிஎஸ் உடன் அவருக்கு பனிப்போர் நடந்து வந்துள்ளது. அதேபோல் தேர்தலில் அடுத்தடுத்து தோல்வி அடைவதும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சோர்வை கொடுத்துள்ளதாக பேசப்படுகிறது.

தற்போது செங்கோட்டையன், தங்கமணி என கட்சியின் முக்கிய நபர்களே அடுத்தடுத்து அதிமுகவில் மறைமுகமாக போர்க்கொடி தூக்கி வருவது அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இபிஎஸ்-ம் இந்த விவகாரங்களில் எதுவும் சொல்லாமல் சைலண்ட் மோடில் இருப்பதும் விமர்சன வலையில் சிக்கியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola