SFI Protest on Mahavishnu issue | ”நடவடிக்கை எடுக்கலனா..” கடுப்பான மாணவர்கள்!பள்ளி வாசலில் போராட்டம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
”நடவடிக்கை எடுக்கலனா..” கடுப்பான மாணவர்கள்!பள்ளி வாசலில் போராட்டம்
அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்ததை கண்டித்து சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளி முன்பு sfi மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அசோக் நகர் மகளிர் அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகாவிஷ்ணு என்பவர் பாவம், புண்ணியம், மறுபிறவி பற்றி பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. அங்கேயே வைத்து இந்த பேச்சு தவறு என தட்டிக் கேட்ட ஆசிரியரையும் தரக்குறைவாக பேசி வாக்குவாதம் செய்துள்ளார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இங்கு எடுக்கப்படும் நடவடிக்கை அனைத்து பள்ளிகளிலும் மாற்றத்தை கொண்டுவரும் என்றும் உறுதி கொடுத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூடநம்பிக்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அசோக் நகர் மகளிர் அரசுப் பள்ளி முன்பு SFI மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரில் ஆபாசமான விஷயங்களை பேசியுள்ளதாகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சொல்லி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.