
Senthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?
தமிழ் நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆயிரம் கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில், அவசரஅவசரமாக அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்ற சம்பவம் தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளான நிலையில், அவர் யாரை சந்தித்தார் அதன் பின்னணனி என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் 2023ம் ஆண்டு ஜுன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதைதொடர்ந்து, பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 471 நாட்கள் கழித்து ஜாமினில் வெளியே வந்தார்.
உடனே அவருக்கு திமுக ஆட்சியில் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அமலாக்கத்துறை, 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றம்சாட்டியது. தனியார் நிறுவனங்களுக்கும் இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசியல் உள்நோக்கத்தோடு இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதனை சட்டரீதியாக அரசு எதிர்கொள்ளும் என்றும் விளக்கமளித்தார். இந்த சூழலில் தான், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மார்ச் 18 ஆம் தேதி டெல்லி சென்று திரும்பினார். அவரது டெல்லி பயணம் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதத்தை கிளப்பியது. அவர் பாஜக அமைச்சர்களை சந்தித்ததாகவும் கூறப்பட்ட நிலையில் தான் அவர் உண்மையாகவே யாரை சந்தித்தார் என்பது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, டெல்லிக்கு சென்ற செந்தில் பாலாஜி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக ஒரு போட்டோ வெளியாகி உள்ளது. அந்த போட்டோவில் முகுல் முகுல் ரோகத்கி செந்தில் பாலாஜி சால்வை போட்டு அருகில் நிற்கிறார். செந்தில் பாலாஜி வழக்கில் முகுல் முகுல் ரோகத்கி வாதடி வரும் நிலையில் அவருடன் செந்தில் பாலஜி பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.