Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்

Continues below advertisement

சுவாமிமலை முருகன் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட லிஃப்ட்டை அமைச்சர் சேகர்பாபு திறந்துவைத்தார். பின்னர் சேகர்பாபுவும், கோவி செழியனும் ஏறியதும் லிஃப்ட் வேலை செய்யாததால் அமைச்சர்கள் கோபமாகி அதிகாரிகளை கடிந்து கொண்டனர்.  

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவிலில் 3.55 கோடி மதிப்பீட்டில் புதிதாக 2 லிஃப்ட் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு இந்த லிஃப்ட்டை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்துவைத்தார். அப்போது, அமைச்சர்கள் சேகர்பாபுவும் கோவி செழியனும் அதிகாரிகள் மற்றும் கட்சியினருடன் சேர்ந்து மேலே உள்ள கோவிலுக்கு செல்வதற்காக லிஃப்ட்டில் ஏறினர். ஆனால் லிஃப்ட் வேலை செய்யாததால் சேகர்பாபுவின் முகம் மாறியது. வெளியே வந்த சேகர்பாபு அங்கிருந்த லிஃப்ட் ஆப்பரேட்டரை பார்த்து முறைத்தார்.

பின்னர் கோவி செழியன் அருகில் இருந்த லிஃப்ட்டில் போகலாம் என அழைத்து சென்ற போது அந்த லிஃப்ட்டிலும் மின்சாரம் திடீரென நின்றது. ஆத்திரமடைந்த அமைச்சர் கோவி. செழியன் லிஃப்ட் ஆப்ரேட்டரை கடிந்து கொண்டார். பின்னர் நீண்ட நேரம் கழித்து ஒரு லிஃப்ட் மட்டும் வேலை செய்தது. அதில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன், பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் ஏறி மேலே வந்தனர். லிஃப்ட் திறக்கப்பட்டதுமே வேலை செய்யாமல் போனது விமர்சனத்தில் சிக்கியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola